“இது மாதிரி பண்ணு.. நீ ஆம்பளை இல்லையா..?” படுக்கையில் இன்ஸ்டா காதலனுடன்.. 38 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..

ஹைதராபாத், டிசம்பர் 16: தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான இல்லத்தரசி பிரியங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான இவர், மர்மமான முறையில் சாலையோர புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெளியான உண்மைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

பிரியங்காவின் உடல் கடந்த வாரம் ஹைதராபாத் அருகே ஒரு தனிமையான சாலையோர புதரில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது செல்போன் சிக்னல் மற்றும் கால் ஹிஸ்டரியை ஆராய்ந்தனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், பிரியங்காவின் போன் சிக்னல் தெலுங்கானாவில் இருந்து மும்பை, பின்னர் கோவா வரை சென்று அங்கு ஸ்விட்ச் ஆஃப் ஆனது தெரியவந்தது.

குடும்பத்தினர் "மும்பையில் எங்களுக்கு உறவினர்கள் இல்லை, ஏன் அங்கு சென்றார்?" என வியப்பு தெரிவித்தனர். இதனால் புதிய கோணத்தில் விசாரணை தொடங்கிய போலீசார், பிரியங்காவின் சமூக வலைதள பயன்பாடுகளை ஆராய்ந்தனர்.

இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத்திற்கு முன்பு பழகிய விஜய் கவுடா என்பவருடன் ஹோட்டல் அறை புக் செய்து உல்லாசமாக இருக்க திட்டமிட்ட சாட் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டிலீட் செய்யப்பட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் விவரங்கள் கோரிய போலீசார், சாட் உரையாடல்களில் குறிப்பிடப்பட்ட இடத்தை வைத்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்டறிந்தனர். அந்த விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி!

பிரியங்காதான் அங்கு ஒரு ஆணுடன் தங்கியிருந்தார் என்பது உறுதியானது. அறை புக் செய்த விஜயின் செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்த போலீசார், கடும் விசாரணையில் உண்மைகள் வெளியாகின.

விசாரணையில் தெரியவந்ததாவது: பிரியங்காவுக்கு கணவருடன் தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாததால், சமூக வலைதளங்களில் துணை தேடினார். இன்ஸ்டாகிராமில் பழகிய விஜயுடன் "காதல் வேண்டாம், உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்வோம்" என உடன்பாடு செய்துகொண்டார்.

பழகிய நான்காவது நாளே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெங்களூரு விடுதியில் விஜயை சந்தித்து உல்லாசமாக இருந்தார். ஆனால், அங்கு பிரச்சனை வெடித்தது. இதுக்கா நான் உன் கூட இவ்ளோ தூரம் வந்தேன்.. இங்க பாரு.. என ஆபாச வீடியோக்களை காட்டி "இதுபோல நீண்ட நேரம் செய்ய வேண்டும்" என பிரியங்கா வற்புறுத்த, "முடியவில்லை" என விஜய் மறுத்தார். "நீ ஆம்பிளையா?" என பிரியங்கா கேலியாக திட்டியதால் ஆத்திரமடைந்த விஜய், அவரை காரில் அழைத்துச் சென்று வழியில் முகத்தில் குத்தினார்.

மயக்கமடைந்த பிரியங்காவை கழுத்தை நெறித்து கொலை செய்து சாலையோரம் வீசிவிட்டு, செல்போனை லாரியில் எறிந்து தப்ப முயன்றார். உல்லாச காட்சிகளை விஜய் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த நிலையில் பிரியங்கா விஜய்யை ஆபாசமாக திட்டியதும் பதிவாகியிருந்தது.

சிசிடிவி, சாட் ஆதாரங்களை காட்டி விசாரித்த போலீசார் முன் வேறு வழியின்றி குற்றத்தை ஒப்புக்கொண்ட விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை தொடர்கிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ஏற்படும் ஆன்லைன் பழக்கங்களின் ஆபத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Summary in English : A 38-year-old married woman from Telangana, Priyanka, seeking physical satisfaction outside marriage, met Vijay via Instagram. They met in a Bengaluru hotel for intimacy, but an argument over performance escalated. Enraged, Vijay assaulted her in his car, dumped her unconscious body roadside, where she died. He was arrested after police traced chats and CCTV.