படுக்கையில் ஆசிரியை.. தூக்கில் மாணவன்.. 3 நாட்களாகியும் முதலிரவு நடக்கல.. மாமியார் வீட்டில் மாணவன் மர்ம மரணம்!

மைசூர், கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியையின் கட்டாயத் திருமணம் சோகமான முடிவை எட்டியுள்ளது. திருமணம் முடிந்து மூன்றாவது நாள் கணவர் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மனைவி கணவன் அவரது முன்னாள் மாணவனை என்பதால் திருமணத்துக்கு உடன்படாத நிலையில், முதலிரவை மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவர் வீட்டார் இதை ‘கொலை’ எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்து விவரங்கள்:

காவ்யா (28) என்ற ஆசிரியை, மைசூர் அருகிலுள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கல்லூரியில் அருண் என்ற மாணவன் படித்தார்.

காவ்யாவிற்கு வரன் தேடும் பணியில் இறங்கிய குடும்பத்தினருக்கு, மகள் காவ்யாவின் முன்னாள் மாணவன் அருணின் சந்திப்பு கிடைத்தது.

அவரது வேலை மற்றும் குடும்ப அந்தஸ்தை காரணம் காட்டி, “நல்ல சம்பந்தமா தெரியுது.. பார்த்து திருமணம் செய்து கொள்” என்று காவ்யாவை கட்டாயப்படுத்தினார். அவன் என்னோட முன்னாள் மாணவன் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவ்யா, குடும்பத்துடன் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியும் செய்தார்.

இறுதியில், குடும்பத்தின் அழுத்தத்தால் காவ்யா திருமணத்துக்கு சம்மதித்தார். கடந்த வாரம் அருணுடன் ஆடல், பாடலுடன் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு முதலிரவில் உடலுறவு கொள்ள மறுத்த காவ்யா, “என்னால் இப்போது சம்மதிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் முடிந்து மூன்று நாட்களாக இந்த சண்டை தொடர்ந்தது.

மூன்றாவது நாள், அருண் அவரது மாமியார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அருனின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில், “எங்கள் மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. இது கொலைதான். மனைவியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து எங்கள் மகனைத் தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம். உடனடியாக அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். “திருமணத்துக்கு முன்பு காவ்யாவுக்கு இந்த உறவில் முழு உடன்பாடு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. முன்னாள் மாணவனான அருணுடன் ஆசிரியை, மாணவன் ரீதியான தொடர்பு இருந்தது. இது திருமண வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தியது” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் திருமணம் என்ற சமூக அங்கத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. பெற்றோர், உறவினர்களின் கட்டாயத்தால் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வது, இரு தரப்பினரின் வாழ்க்கையையும் சீரழிக்கும் என்பதை இது நினைவூட்டுகிறது.

சொத்து, பணம், சமூக அந்தஸ்து ஆகியவற்றை மட்டும் பார்த்து திருமண முடிவெடுப்பதை விட, இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்களா, மனம் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்ந்து முடிவு எடுப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், கட்டாயத் திருமணங்கள் மன உளைச்சல், மனச்சோர்வு மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது. போலீஸ் விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : In Karnataka, a woman teacher married a man chosen by her family who is her former student. After the wedding, disputes arose between the couple. On the third day, the husband was found dead in his mother-in-law's house. Police are investigating the case based on complaints from both sides.