பிரபல நடிகருக்காக தன்னுடைய அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்ட நடிகை மீனா..! – பாருப்பா..!

நடிகை மீனா 90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.

குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டு கால திரையுலக அனுபவம் பெற்று இருக்கும் நடிகை மீனா குறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் ( அதுதாங்க பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் மங்கூஸ் மண்டையன் என்ற கதாபாத்திரத்தில் வருவாரே அவர் தான் ) சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மீனா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

பிரபல நடிகரின் பேச்சைக் கேட்டு தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை மீனா என்பதுதான் அவர் கூறிய தகவலின் சாராம்சம். அவர் கூறியதாவது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகை மீனா பிஸியாக நடித்து வந்தார்.

படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்தில் வந்து விடுவார் இதற்கு முக்கியமான காரணம் நடிகர் நாகேஸ்வர ராவ் தான். நாகேஸ்வர ராவ் நடிகர் நாகார்ஜுனாவின் அப்பா மற்றும் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகை மீனாவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். அப்படி ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீனாவுடன் பேசிய நடிகர் நாகேஸ்வர ராவ், நீ யாருக்காகவும் காத்திருக்கலாம் அது தவறு கிடையாது.. ஆனால், யாரும் உனக்காக காத்திருக்கக் கூடாது.. இந்த பழக்கத்தை மட்டும் எப்போதும் கற்றுக்கொள்.

இது உனக்கு பல இடங்களில் உதவும். நேரம் தவறாமை என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக் கொண்ட நடிகை மீனா தற்போது வரை படப்பிடிப்பு தங்களுக்கு படப்பிடிப்பு நடக்கும் நேரத்திற்கு முன்பாகவே வந்து அட்டனன்ஸ் போட்டு விடுவாராம்.

இன்று இருக்கக்கூடிய இளம் நடிகர் நடிகைகள் பலரும் நேரத்தை மதிப்பது கிடையாது. படப்பிடிப்பு தொடங்கிய பின்பும் படப்பிடிப்பு தளங்களுக்கு வராமல் இழுத்து அடித்துக் கொண்டு இருப்பதால் தயாரிப்பாளர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் மற்றும் கணிசமான பணமும் விரயமாகிறது.

இதனை பல்வேறு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலதரப்பட்ட பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கோடிக்கணக்கில் பணம் புரளக்கூடிய ஒரு துறையில் நேரம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை நடிகை மீனாவுக்கு நடிகர் நாகேஸ்வர ராவ் கூறியிருக்கிறார்.

இந்த நாகேஸ்வரராவின் இந்த கருத்தின் படி நடிகை மீனா எந்த ஒரு படப்பிடிப்பு தளத்திற்கும் தாமதமாக வருவதோ அல்லது வராமல் இருப்பதோ கிடையாதாம்.