முதல் கணவரை கொன்ற கொலைகாரியே.. அடுத்து அமீரையும்.. பாவனி ரெட்டி கூறிய தகவலை பாருங்க..!

முதல் கணவரை கொன்ற கொலைகாரியே.. அடுத்து அமீரையும்.. பாவனி ரெட்டி கூறிய தகவலை பாருங்க..!

சினிமா, சீரியல் என நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெறும் பிரபலங்கள், ஒருகட்டத்தில் ஏதேனும் மக்கள் பார்வையில் தவறாக படும் பட்சத்தில் மிக மோசமான விமர்சனங்களுக்கும் ஆளாகின்றனர்.

அது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, சில காட்சிகளில் நடித்து செல்லும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தாலும் சரி மக்கள் விமர்சனத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

பாவனி ரெட்டி

பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் ஏற்கனவே தன்னுடன் சீரியல்களில் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால் ஒரு கட்டத்தில் கணவன், மனைவி ஏற்படும் கருத்து வேறுபாடு, கசப்பான உணர்வுகள், கோப தாபங்களால், பாவனியின் கணவர் மனம் வெறுத்துப் போய் விரக்தியில் தூக்கு போட்டு உயிரிழந்தார்.

பிக்பாஸ்

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாவனி ரெட்டியை, ஒயில்டு கார்டு முறையில் உள்ளே வந்த நடன இயக்குனர் அமீர், சுற்றி சுற்றி வந்து டாவடித்தார்.

ஜோடி பொருத்தமே இல்லாத அவர், பாவனி ரெட்டியிடம் காதல் கொண்டது, பார்வையாளர்களுக்கே பிடிக்காமல் முகம் சுளித்தனர்.

குடும்பம் நடத்தினர்

துவக்கத்தில், பாவனி ரெட்டியும் அமீரை உதாசீனம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரும் அமீர் மீது காதல் கொண்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்கள், தாலி கட்டாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்திய தகவல்கள் வெளியானது.

இதையும் படியுங்கள்: என்ன சிம்ரன் இதெல்லாம்.. படு சூடான படுக்கயறை காட்சியில் வாணி போஜன்.. ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..

இதையறிந்த பலரும், குரங்கு கையில் பூ மாலையா என்பதை போன்ற மிக கடுமையான விமர்சனங்களை செய்தனர். ஏறக்குறைய சில ஆண்டுகளாக ஒன்றாக இருந்து குடும்பம் நடத்தி வரும் பாவனி ரெட்டி, அமீர் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பாவனி ரெட்டி, அமீர் வரும் நவம்பரில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அந்த நேர்காணலில் பாவனி ரெட்டி கூறியதாவது,

என்னை விரும்புபவர்களுக்கு நான் நிறைய அன்பை காட்டுவேன். அவர்களுக்காக எதையும் பார்த்து பார்த்து செய்வேன். அவர்களது நன்மைக்காக நிறைய யோசிப்பேன்.

நான்தான் கொலை செய்தேன்

எனது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு, நான்தான் கொலை செய்தேன் என்றெல்லாம் கமெண்ட் செய்கின்றனர். அதற்கு நான் விளக்கம் கொடுக்க நினைத்தது இல்லை. ஏனென்றால் அதெல்லாம் கடந்து போய்விடும் என எனக்கு தெரியும்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அமீரை எப்போது

நான் இப்போது அமீருடன் இருக்கும்போது, முதல் கணவரை போல அமீரை எப்போது கொல்லப் போகிறாய் என்று கேள்வி கேட்டு கமெண்ட் செய்கின்றனர்.

நானும் என் முதல் கணவரும் எப்படி எல்லாம் காதலித்தோம், எத்தனை ஆண்டுகள் காதலித்தோம் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. எந்த மாதிரி அன்பாக இருந்தோம் என்பது எனக்குத்தான் தெரியும்.

கொலைகாரியே

இதற்கெல்லாம் பொதுவெளியில் அழாமல், தனிமையில் இருக்கும்போது அழுதுவிடுவேன் என்று பாவனி ரெட்டி உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.

முதல் கணவரை கொன்ற கொலைகாரியே.. அடுத்து அமீரையும் கொல்வாயா என்று, பாவனி ரெட்டியை பலரும் விமர்சிப்பதால் அவர் நொந்து போய் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.