நாகர்கோயிலில் வடஇந்திய தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் !

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே அமைந்துள்ள கயிறு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை நேரில் சென்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பணிபுரியும் பீகார் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த வட இந்திய தொழிலாளர்களுடன் தற்பொழுது கலந்துரையாடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு கையுறை தயாரிக்கும் நிறுவனமான  காணம் லேட்டஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், அங்கு சென்று பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களுடன் பேசினார். இங்கு மொத்தம் 450 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்

இவர்களில் 30 தொழிலாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் அந்த தொழிலாளர்களுடன் நீங்கள் இங்கு எத்தனை ஆண்டு பணிபுரிகிறார்கள் இங்கு சூழல் எப்படி உள்ளது இங்கு உள்ள மக்கள் உங்களுடன் எப்படி பழகுகிறார்கள் மேலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அதற்கு சில தொழிலாளர்கள் ஆறு ஆண்டுகளாக வும் பலர் ஓராண்டு முதலிய ஆண்டு காலமாக இங்கு பணிபுரிந்து வருவதாகவும் சில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தங்களது சூழல் நல்ல முறையில் இருப்பதாகவும் நிறுவனத்தில் தரமான உணவு என அனைத்து வசதிகளும் செய்து தருவதாகவும் இங்குள்ள மக்கள் நன்றாக பழகுவதாகவும் கூறியுள்ளார்கள்.

மேலும் அவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருவதாகவும் தங்களுடைய நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். அப்போது ஸ்டாலின் தொழிலாளர்களுடன் உரையாடியபோது எந்த வதந்தியும் நீங்கள் நம்ப வேண்டாம் நீங்கள் அமைதியாக இங்கு வேலை செய்யலாம் அதற்கு தமிழக அரசு உதவும் எனவும் கூறினார் இந்த நிகழ்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வருவாய் மற்றும் பெயர்

--Advertisement--

பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிஎன் ஸ்ரீதர் காரணம் லேட்டஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் பிரவீன் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தார்கள்.