ரஜினி வீட்டில் நடந்த அசிங்கம்.. தனுஷ் அப்பாவிடம் லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. தலையை பிடித்துக்கொண்ட ரஜினி..

ரஜினி வீட்டில் நடந்த அசிங்கம்.. தனுஷ் அப்பாவிடம் லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. தலையை பிடித்துக்கொண்ட ரஜினி..

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். அவரை அரசியலுக்கு வருமாறு பல ஆண்டுகளாக தமிழக மக்களில் ஒரு தரப்பினும், அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கின்றன.

எனினும் சினிமாவே என் வாழ்க்கை பயணத்துக்கு போதுமானது. அரசியல் எனக்கு வேண்டாம் என, ராஜாதி ராஜா படத்தில் எனக்கு கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் என அரசியலை விட்டே ஒதுங்கி போய் இருக்கிறார் ரஜினிகாந்த்.

குடும்ப அரசியல்

ஆனால் அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட அரசியல் நடந்துக்கொண்டு இருப்பது, இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. குடும்ப அரசியலையே சமாளிக்க முடியாத நம்மால், எப்படி தமிழக அரசியலை சமாளிக்க முடியும் என்ற யோசனையில்தான் ரஜினி அரசியலுக்கே வரவில்லையோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

கோர்ட் வாசல்

ஏனெனில் ரஜினி வீட்டுக்குள் நடந்த அரசியல்தான், இப்போது அவரது மூத்த மகளும், மூத்த மருமகனும் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் படிக்கட்டுகளை ஏறி இருக்கின்றனர்.

--Advertisement--

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் வளர்ந்த பிள்ளைகள் யாத்ரா, லிங்கா எதிர்காலத்தை கூட இருவரும் கவனம் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள் என்பதுதான்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பற்றிய தகவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சமீபத்தில் இருவருடைய விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தின் வாயிலுக்கு சென்று இருக்கிறது.

திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்

இதில் எங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனு கொடுத்து இருக்கிறார். இந்த வழக்கின் அடுத்த அடுத்த நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆனால் அதற்கு முன்பு விவாகரத்து பெறும் அளவுக்கு ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் என்னதான் நடந்தது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள், இப்படி விவாகரத்து கேட்டு நிற்கிறார்களே என்ற விசாரித்த போது இன்னொரு தகவலையும் கூறுகிறார்கள் கோடம்பாக்க வட்டாரத்தினர்.

தனுஷின் பெற்றோர் அவமதிப்பு

ரஜினிகாந்த் வீட்டில் சில முறை தனுஷின் பெற்றோர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் தான் அது. லதா ரஜினிகாந்த் ஒரு முறை தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவை, வெளிய போ என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரஜினி தலையை பிடித்துக்கொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: எனக்கு 17 வயசு தான் ஆகுது.. இந்த கேள்வியை கேக்குறீங்க.. கடுப்பான நடிகை அனிகா சுரேந்திரன்..!

ஒரு முறை.. இரண்டு முறை.. என்றால் பிரச்சனை கிடையாது. தொடர்ந்து தனுஷின் பெற்றோருக்கு அவமரியாதை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதனை தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவிடம் தனுஷ் கேட்கவே, அங்கே ஏற்பட்ட பிரச்சினைதான் விவாகரத்து வரை வந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

பங்களாவுக்குள் அவர்கள் வரக்கூடாது

இந்த அவமானத்தை மாற்ற வேண்டும் என்று தான் 200 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த பங்களாவிற்கு தனுஷூடைய பெற்றோர் வரக்கூடாது என்று ஐஸ்வர்யா தனுஷிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: விஜயகாந்த் குறித்து உண்மையை உடைத்த சுகன்யா..!

இதனால் உச்சகட்ட கடுப்பான தனுஷ் விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் தான் இது. எனினும் இதுகுறித்து இரு தரப்பிலிருந்தும் யாரும் புகாராகவோ அல்லது பேச்சுவாக்கிலோ யாரும் பேசவில்லை. கோடம்பாக்க வட்டாரத்தில் வாய் வழியாக பரவிக் கொண்டிருக்க கூடிய தகவல் மட்டும் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி வீட்டில் நடந்த அசிங்கம்..

தனுஷ் அப்பாவிடம் லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த வெளிய போ என்று சொன்ன அந்த வார்த்தை.. மனைவியை அடக்க முடியாமல் தலையை பிடித்துக்கொண்ட ரஜினி என பல சம்பவங்களின் பின்னணியே தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமாகி இருக்கிறது.