“அதை டிஷ்யூ பேப்பரில் கொடுத்தேன்.. டார்ச் லைட் அடித்து பார்த்தார்..” நடிகை டயானா விஷாலினி ஓப்பன் டாக்..!

“அதை டிஷ்யூ பேப்பரில் கொடுத்தேன்.. டார்ச் லைட் அடித்து பார்த்தார்..” நடிகை டயானா விஷாலினி ஓப்பன் டாக்..!

பிரபல நடிகை டயானா விஷாலினி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சூரரைப் போற்று, காலா, லிங்கா, மான்ஸ்டர், பைரவா, மாஸ்டர், ஆரஞ்சு மிட்டாய், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்தது எல்லாமே சின்ன சின்ன ரோல்கள்தான் என்றாலும் கவனிக்கப்படும் கேரக்டரில் நடித்துள்ளார்.

குறிப்பாக குடும்ப கதைகளில் அக்கா, தங்கை, அண்ணி கேரக்டர்களில் இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்துள்ளது. கவனித்து ரசிக்கப்படும் நடிகையாக இருந்தாலும், பெரிய அளவில் அவரது சினிமா பயணத்தில் முன்னேற்றம் இல்லை.

டயானா விஷாலினி

பார்த்தவுடன் ரசிக்க வைக்கும் அழகில் இருக்கிறார் டயானா விஷாலினி. காலா படத்தில், தன் மகனை ஹரிதாதா ஆட்கள் கொலை செய்து விட்டார்கள் என, காலா வீட்டின் முன் கதறி அழும் காட்சியில் ஒரு தாயாக தன் அன்பை, அந்த அறைகூவலில் அவர் வெளிப்படுத்தி இருப்பார்.

--Advertisement--

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பல்வேறு இயக்குனர்கள் குறித்தும், தான் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் உடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “Zoom பண்ணி பாத்தவங்க லைன்ல வா..” பீச்சில் உள்ளே எதுவும் அணியாமல்.. சாந்தினி தமிழரசன்..

பயமாக இருந்தது

அதில் அவர் கூறியதாவது, முதல் முறையாக இயக்குனர் ஷங்கரை நான் பார்த்தபோது அவரிடம் பேசுவதற்கு பயமாக இருந்தது. அவர் அந்த நேரத்தில் அங்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. திடீரென வந்திருந்தார்.

அவர் என்ன வேலைக்காக வந்தார் எதற்காக வந்தார் என்று எதுவுமே எனக்கு தெரியாது. இருந்தாலும் அவரிடம் பேச வேண்டுமே என்று முயற்சி செய்தேன்.

எனக்கு தெரிந்த ஒருவர் இயக்குனர் ஷங்கரின் நெருக்கமானவர் அவரும் அங்கே இருந்தார். அவரிடம் சொல்லி சார் நான் அவரிடம் பேச வேண்டும் என்று கேட்டேன். போய் பேசுங்கள் என்று சொன்னார். ஆனால், எனக்கு பயமாக இருந்தது.

டிஷ்யூ பேப்பர்

இதனால் டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து, அதில் என்னுடைய விருப்பங்களை எழுதி அவரிடம் கொடுத்தேன்.

அந்த டிஷ்யூ பேப்பரில், நான் உங்களுடைய படைப்புகளின் மிகப்பெரிய ரசிகை… உங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் தற்போது நான் வாய்ப்பு கேட்டு இந்த கடிதத்தை எழுதவில்லை, என்றெல்லாம் எழுதி அவரிடம் கொடுத்தேன்.

இதையும் படியுங்கள்: ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல இருக்கு.. நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.. தூக்கம் தொலைத்த இளசுகள்..

டார்ச் லைட் அடித்து பார்த்தார்

அதை என்னுடைய நண்பரிடம் கொடுத்து டைரக்டர் ஷங்கரிடம் கொடுக்கச் சொன்னேன். அவரும் வாங்கி ஷங்கரிடம் கொடுத்தார்.

அப்போது ஷங்கர் அதில் நான் எழுதியிருப்பதை படிக்க முடியவில்லை என்பதால், டார்ச் லைட் எடுத்து அடித்து படித்துப் பார்த்தார். படித்து முடித்துவிட்டு, என்னை அழைத்து நான் உங்களை பாராட்டுகிறேன்.

தொந்தரவு செய்யாமல்

நீங்கள் என்னை தொந்தரவு செய்யாமல், உங்களுடைய விஷயத்தை என்னிடம் உங்களுடைய கோரிக்கையை என்னிடம் வைத்திருக்கிறீர்கள். காட் பிளஸ் யூ.. என்று கூறினார் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை டயானா விஷாலினி

ஷங்கர் படத்தில் நடிக்கும் தன் ஆசையை டிஷ்யூ பேப்பரில் கொடுத்தேன்.. அதை டார்ச் லைட் அடித்து பார்த்து அவர் பாராட்டினார் என, நடிகை டயானா விஷாலினி ஓப்பனாக கூறி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.