தமிழ் சமூகம் குட்டிச்சுவராக மாற காரணமே ராதிகா தான்..! பிரபல மருத்துவர் விளாசல்..!

தமிழ் சமூகம் குட்டிச்சுவராக மாற காரணமே ராதிகா தான்..! பிரபல மருத்துவர் விளாசல்..!

பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் முக்கிய பங்கு வகித்த தமிழ் சமூகம் இன்று குட்டிச்சுவராக மாறுவதற்கு காரணம் திரைப்படங்களில் நடித்த நடிகை ராதிகா தான் காரணம் என தற்போது மூத்த அரசியல் விமர்சகர், டாக்டர் காந்தராஜ் பரபரப்பு செய்தியை தந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார்.

நடிகை ராதிகா..

நடிகை ராதிகாவை பொறுத்த வரை தனது அப்பா நடிகவேள் எம் ஆர் ராதா போலவே தைரியம் மிக்க நடிகையாக திகழ்ந்தவர். அத்தோடு அரசியலிலும் ஈடுபட்டவர். இவர் திரை உலகில் இயக்குனர் பாரதிராஜாவின் மூலம் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மேலும் நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என பல நடிகர்களோடு இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நேர்த்தியான முறையில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறக் கூடிய வகையில் இருந்ததோடு அண்ணன் தங்கை பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் இருந்தது.

--Advertisement--

அத்தோடு பாரதி கண்ட புதுமைப்பெண் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட கேரக்டர் ரோல்களையும் தேர்வு செய்து நடித்து அனைவரது அன்பையும் பெற்றவர். மேலும் ராதிகா தன்னோடு நடித்த நடிகர் சரத்குமாரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பன்முகத் திறமையை கொண்ட நடிகை ராதிகா திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி சீரியலில் நடித்து தமிழகம் எங்கும் இருக்கும் ரசிகர்களின் மனதில் சித்தியாகவே வாழ்ந்து விட்டார். இதனை அடுத்து தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

மருத்துவர் விளாசல்..

இந்நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் நடிகை ராதிகா குறித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில் ரசிகர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடிய தகவல்களை பதிவு செய்தார்.

அத்தோடு இன்று இருக்கக் கூடிய இந்த தமிழ் சமூகம் சீர்கெட்டு நாசமாய் போய் குட்டிச்சுவராக இருப்பதற்கு காரணமே நடிகை ராதிகா தான் என்று கூறிய கருத்து பலரையும் ஏன்? இவர் இப்படி கூறுகிறார் என்ற கேள்வியை கேட்க வைத்து விட்டது.

நடிப்பதில் திறமைசாலியான நடிகை ராதிகா மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் மனநிலை சரியில்லாத பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரது நடிப்புத் திறன் மிக சீரிய முறையில் வெளிப்பட்டு இருந்தது.

அத்தோடு சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்ததில் நடிகை ராதிகாவின் பங்கு அளப்பரியது. சித்தி சீரியலின் மூலம் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் நேரத்தை குட்டி சுவராகி சீரியல் இடைவேளைகளின் போது தான் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடுக்கு கிடைக்கக்கூடிய நிலைக்கு தமிழ் சமுதாயத்தை நாசமாய் மாற்றுவதற்கு காரணமே ராதிகா என்று சிரித்தபடி பேசி இருக்கிறார்.

மேலும் சீரியல் அடிக்ஷனாக ஒவ்வொரு தமிழனும், இல்லத்தரசியும் மாறுவதற்கு காரணமே ராதிகா தான். சீரியல்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை கொடுத்ததும் இவர் தான் எனவே இவரை தமிழ் சீரியலின் தாய் என்று கூட அழைக்கலாம்.

எனவே தமிழ் மக்களின் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக தின்று வரும் இந்த சீரியல்கள் நமது சமூகத்தை நாசமாக்கி வருவதாக கூறியதோடு ராதிகா நடித்த நான்கு சீரியல்களும் சூப்பர் ஹிட் என்று புகழ்ந்து இருக்கிறார்.