தமிழர்களை சுரண்டி கொளுத்துவிட்டார் ! சீமானை விமர்சிக்கும் முன்னாள் தம்பி

சீமானை விமர்சிக்கும் முன்னாள் தம்பி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்பொழுது பல மேடை பிரச்சாரங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பால் ஏற்படும் தாக்கம் குறித்துப் பேசி வருகிறார்.  அவர்கள் கூலி வேலைகளை செய்து வந்தாலும்,இங்கு அவர்கள் படையெடுத்து வருவதால் அவர்களுக்கு  வாக்குரிமை கிடைத்து விட்டால் பாஜகவுக்கு சாதகமாகி விடும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்து பேசி வருகிறார்.

இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்தப் பிரச்சினைக்கு விதை போட்டதே சீமான் தான் என்று திமுகவினர் தற்பொழுது குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிலைக்கு திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள் மற்றும் திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வால என்று அழைப்பது ஆகியவை தான் இன்று இந்த பிரச்சனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி சீமானை சீண்டி ட்வீட் போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராஜீவ் காந்தி தன்னுடைய ட்வீட்டில் இவ்வாறு கூறியுள்ளார்.

“உழைத்துப் பிழைக்க வரும் அப்பாவி தொழிலாளர்கள் நம் கருணைக்கு உரியவர்கள். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சுரண்டிக் கொழுத்து வசதி பெற்று விட்டு புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்களை தமிழினத்தின் எதிரியாக பார்ப்பது பேராபத்து “என்று சீமானை விமர்சித்துள்ளார்.

--Advertisement--

தற்பொழுது வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வீடியோ வதந்தி என்றும் தமிழக அரசு தக்க பாதுகாப்பு வழங்குகிறது எனவும் ,பீகார் அரசை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக அரசியல் அரங்கில் இந்த சம்பவம் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது