பழைய காதலை மறக்கல… அவருக்காக இதயம் துடித்து கொண்டு தான் இருக்கும்..! – ரகசியம் உடைத்த குஷ்பூ..!

கடந்த 1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னி குஷ்பூ ( Kushpu ) அவரது அழகில் மயங்கிய ரசிகர்கள், குஷ்புவுக்கு கோவில் கட்டிய பரபரப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில், ரவுண்டு கட்டி அடித்தவர் குஷ்பு. எல்லையற்ற கவர்ச்சியில், ரசிகர்களை மயக்கினார்.குஷ்பு நடித்த படங்கள் என்றால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பி. வாசு இயக்கத்தில், பிரபு – குஷ்பு நடித்த சின்னதம்பி படம், மெஹா ஹிட் படமாக அமைந்தது.

மாலை 6 மணிக்கு பிறகு, கண்பார்வை தெரியாத மாலைக்கண் நோயாளியாக கவுண்டமணியின் நடிப்பும், நகைச்சுவை காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு மிக பக்கபலமாக அமைந்தது.

kushpu

தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான குஷ்பு, வருஷம் 16 படத்தில், நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நடித்து பிரபலமானார். சின்னதம்பி மூலம், முன்னணி நடிகையான அவர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, ஜெயராம், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தார்.

இந்த காலகட்டத்தில், பிரபுவுக்கும் – குஷ்புவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் ரகசிய திருமணம் கொண்டதாகவும் தகவல் பரவியது. இது, கோலிவுட்டில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

--Advertisement--

அதன்பிறகு, பிரபு – குஷ்பு இருவரும் படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை. பொது இடங்களில் சந்தித்துக்கொண்டாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நாளடைவில் இந்த விஷயம் அப்படியே மறைந்து போனது.

kushpu

இதையடுத்த சில ஆண்டுகளில் முறைமாமன் என்ற படத்தில் குஷ்பு நடித்த போது, அந்த படத்தின் இயக்குநர் சுந்தர் சி க்கும், குஷ்புவுக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.தொடர்ந்து படங்களில், டிவி சீரியல்களில் நடித்து வரும் குஷ்பு, ஒரு கட்டத்தில் திமுகவில் இணைந்தார். பின் அங்கிருந்து காங்கிரஸ்க்கு மாறினார். இப்போது, பாஜக வில் இருக்கிறார். 50 வயதுகளை கடந்துவிட்ட குஷ்பு, இப்போதும் சினிமா, அரசியல், படங்கள், சீரியல் தயாரிப்புகளில் தீவிரமாக இருந்து வருகிறார்.

kushpu

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பேசிய குஷ்பு, ‘பிரபுவை காதலித்தது உண்மைதான். ஆனால், அது நடந்து முடிந்த விஷயம். அவருக்கும் குடும்பம் இருக்கிறது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. அவரவர் வாழ்க்கையை, இப்போது சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்,’ எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரத்தில், திடீர் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குஷ்பு, சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த நிலையில் தற்போது, வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.இந்நிலையில், குஷ்பு செய்துள்ள டிவீட் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குஷ்பு கூறியிருப்பதாவது,

kushpu

சின்னதம்பி படம் ரிலீஸ் ஆகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் மீது ரசிகர்கள் காட்டிய அன்புக்கு, நான் கடன்பட்டிருக்கிறேன். என்னுடைய இதயம் எப்போதும் பி. வாசு சார், பிரபு சாருக்காக துடிக்கும். இப்படத்தில் இசையமைத்த இளையராஜா சார் மற்றும் கேபி பாலு சாருக்கும் நன்றி, என கூறியுள்ளார்.

இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.