வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதற்கு தயார்.. ஆனால்.. நடிகை பாப்ரி கோஷ் வில்லங்க பேச்சு..!

நடிகை பாப்ரி கோஷ் தமிழ் மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகையாக இருக்கிறார். மேலும் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.


இவர் பெங்காலி திரைப்படமான கால் பேலா திரைப்படத்தில் 2009-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டவர் இல்லம் சீரியலில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை பாப்ரி கோஷ்..

தமிழ், தெலுங்கு, பெங்காலி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் 2015 -ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2016 இல் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2017-ல் பைரவா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் அசாத்தியமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: படுசூடான படுக்கயறை காட்சியில் குடும்ப குத்து விளக்காக நடிகை வித்யா பிரதீப்..! ரசிகர்கள் ஷாக்..!

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சர்க்கார் விசுவாசம் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல ரிச்சை தந்தது. அதிலும் சர்க்கார் படத்தில் கீர்த்தியோடு இணைந்து இவர் செய்த லூட்டிகள் யாராலும் மறக்க முடியாது.

தற்போது திரைப்படங்கள் ஏதும் இல்லாத நிலையில் சீரியல்களில் கலை கட்டி நடித்து வரும் இவர் நாயகி பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி இரண்டு, மகராசி, வானத்தைப் போல, அருவி, சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிரத் தயார்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் விருந்தினராகவும், ரவுடி பேபி நிகழ்ச்சியில் பங்கேற்க பங்கேற்பாளராக பங்கு பெற்ற இவர் பூவா தலையா, மாத்தி யோசி, சிங்க பெண்ணே போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக பங்கேற்று இருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய இவர் எதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு வில்லங்கமான பதிலை தந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

அந்த வகையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியானது பட வாய்ப்புக்காக நீங்கள் படுக்கையை பகிர்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு பிரபல நடிகை பாப்ரி கோஷ் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரத் தான் தயாராக இருப்பதாக கூறிவிட்டார்.


ஆனால் யார் என்னை அப்படி பட வாய்ப்பு கொடுக்கிறேன் என அந்த இடத்தில் படுக்கைக்கு அழைத்தார்களோ, அந்த இடத்தில் நான் சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

ஆனால் வில்லங்க பேச்சால் பரபரப்பு..

அத்தோடு அவர் தன்னை படுக்கைக்கு அழைத்த நபர் தன்னுடைய வீட்டில் இருக்கும் போது அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் முத்தம் கொடுத்து பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொன்னீர்களே நான் ரெடி என்று சொல்லுவேன் என்று வில்லத்தனமாக பேசி இருக்கிறார் நடிகை பாப்ரி கோஷ்.


இதையும் படிங்க: ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம்.. உதவியளாரின் சம்பளம் மட்டும் இவ்வளவா..? ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன்டாக்…!

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் வில்லங்கத்தனமாக பாப்ரி கோஷ் பேசி இருந்தாலும் அவருக்கு நல்ல தைரியம் உள்ளது என்று கூறி பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதால் அனைவரும் இந்த விஷயத்தை திரும்ப, திரும்ப பேசி வருகிறார்கள்.