யார் அடுத்த சூப்பர் ஸ்டார்..? நடிகை பார்வதி செருப்படி பதில்..!

நாட்டுக்குள்ளும் சரி, வீட்டுக்குள்ளும் சரி எவ்வளவோ பிரச்சனைகள் அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் நினைத்து அக்கறை எடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.

இதற்குக் காரணம் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அனைவருமே சினிமாவில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருவதோடு தனிமனித வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்களும் அவர்கள் விரும்பும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பலவிதமான பட்டங்களை கொடுத்து அழைப்பதில் பேரின்பம் அடைகிறார்கள். அந்த வகையில் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் பழக்கம் இந்தியாவில் நிலவுகிறது.

தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய நடிகரான ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் ஆக சித்தரித்து நாம் அழைக்கிறோம். அது போல தேசிய அளவிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக விளங்குகிறார்.

இவரை அடுத்து மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டார்கள் ஆக விளங்கக்கூடிய நடிகர்கள் யார்? யார்? என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் வேறு யாருமில்லை. மம்முட்டி மற்றும் மோகன் லால் தான்.

--Advertisement--

இது போலவே இந்தி திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தங்களை சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மத்தியில் வெளிப்படுத்தி இருக்கும் நடிகராக ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற நடிகர்களை நாம் குறிப்பிட்டு கூறலாம்.

தற்போது திரை உலகில் இவர்களுக்குப் பின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி ஒரு மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. இதனை அடுத்து ஒவ்வொருவரும் ரசிகர்களும் ஒவ்வொரு நடிகர்களின் பெயர்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.

எனினும் சரியான தீர்வு கிடைக்காத எதிர்கால சூப்பர் ஸ்டார் யார்? என்ற பிரச்சனையானது தற்போது சற்று ஓய்ந்திருந்தது என்று கூறலாம். ஓய்ந்திருந்த இந்தப் பிரச்சனையை மீண்டும் நடிகை பார்வதி பேசும் பொருளாக மாற்றி சமூக வலைத்தளங்களில் அவரது கருத்தை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இவர் சூப்பர் ஸ்டார் யாருக்கு என்ன தருவார், எதார்த்தமாக யோசித்துப் பார்த்தால் எதுவுமே தர முடியாது. இதனால் நேர விரயம் மட்டும் தான் ரசிகர்களுக்கு ஏற்படும். எனவே என்னால் சூப்பர் ஸ்டார் யார் என்பதை இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும் இந்த பட்டத்தின் காரணத்தால் யாருக்காவது பயன் ஏற்பட்டுள்ளதா? என்று யோசித்துப் பார்த்தாலும் தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தனிப்பட்ட ஒருவருக்கு ஏதேனும் ஒரு இமேஜை கொடுக்கிறதா? என்ற கேள்வியை வைத்து விட்டார்.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் என்று சொல்லுவதை விட சூப்பர் ஆக்டர் என்று சொல்லுவதே தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியவர், மலையாளத்தில் மூன்று சூப்பர் ஆக்டர்களாக மாறி இருக்கும் பகத் பாசில், ஆசிப், ரீமா கல்லிங்கல் ஆகியோரை பற்றி பெருமையாக பேசினார்.