“உடலுறவில் இது கட்டாயம் இருக்கணும்..” நடிகை சமந்தா ஓப்பன் டாக்..!

“உடலுறவில் இது கட்டாயம் இருக்கணும்..” நடிகை சமந்தா ஓப்பன் டாக்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக பல முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகை சமந்தா பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

நடிகை சமந்தாவை பொறுத்த வரை தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்ததற்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகரின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதும் அவர்களது திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து உடல்நிலை பாதிப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை என பல்வேறு இன்னல்களை சந்தித்து தற்போது அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்வார்.

--Advertisement--

மேலும் நடிகை சமந்தா கடைசியாக சிவ நிர்வாணாவின் காதல் நகைச்சுவை திரைப்படமான குஷி படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து அமெரிக்க தொடரான சிட்டாடலின் இந்திய மதிப்பில் நடிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்க உள்ளார்கள் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். தி ஃபேமிலி மேன் என்ற ஹிட் ஷோ வின் இரண்டாவது சீசனுக்கு பின் இந்த கூட்டணி உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் உடலுறவில் இது கட்டாயம் இருக்கணும் என்று ஓபனாக பேசியிருக்கும் விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு இவர் எதற்காக இதைப் பற்றி பேசினார் என்பதை பற்றியும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் அவர் கூறிய விஷயத்தில் உடலுறவில் ஆண், பெண் இருவருக்குள்ளும் அவர்களுடைய அன்பை தாண்டிய ஒரு காதல் இருக்க வேண்டும். அப்போது தான் அது முழுமை அடையும்.

மேலும் அவர்கள் காதலை எல்லையற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் போது இருவருக்கும் இடையே இருக்கும் உடலுறவு சிறப்பாக இருக்கும் என்று பேசி இருக்கிறார் நடிகை சமந்தா.

இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ஆண், பெண் இருவரும் உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.