வெடியை போட்ட சீமான்..! தவசி படத்துக்கு வசனம் எழுதியது யாரு..? இதோ ஆதாரம்..!

புரட்சி கலைஞர் கேப்டன் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி இருக்கிறது. அண்ணாருடைய இறுதி சடங்கு நேற்று தொண்டர்கள், பொதுமக்கள் சூழ அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிரபல நடிகர் மற்றும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள் விஜயகாந்த் குறித்தான தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தவசி படத்திற்கு நான் தான் வசனம் எழுதியிருந்தேன். விஜயகாந்திற்க்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இருக்கிறது என்று பேசியிருந்தார்.

ஆனால், இந்த விஷயம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது. சீமானின் பேச்சை கேட்ட இணைய வாசிகள் தவசி திரைப்படத்திற்கு வசனம் எழுதியது சீமான் கிடையாது படத்தின் இயக்குனரான உதய சங்கர் தான்.

இந்நிலையில், சீமான் நான் தான் வசனம் எழுதினேன் என்று கூறுகிறார் என்று வழக்கமாக அவருடைய நடவடிக்கைகளை கிண்டல் செய்யக்கூடிய இணைய ஆசாமிகள் சிலர் தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், சீமான் தான் தவசி படத்தில் பல்வேறு வசனங்களை எழுதி இருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவித்து படத்திலேயே கார்டும் போடப்பட்டிருக்கிறது.

அதே சமயம், இணைய ஊடகங்களிலும் இந்த தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் உதயசங்கரிடமே இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது சீமான் தான் தவசி படத்துக்கு வசனம் எழுதினார். பல்வேறு வசனங்களை சீமான் எழுதியிருக்கிறார் என்று பதில் அளித்து இருக்கிறார்.