சமந்தாவை வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகையின் கணவர்..! – யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில், மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தெலுங்கிலும் இவர்தான் முன்னணி நாயகி. தமிழில் அஞ்சான், தெறி, கத்தி, தங்கமகன், ஈ, நடிகையர் திலகம், யசோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.  புஷ்பா படத்தில், ஊ சொல்றியா மாமா… என்ற ஐயிட்டம் பாடல் மூலம், ரசிகர்களை கிறங்கடித்தவர் சமந்தா.

நடிகர் நாகார்ஜூனா – அமலா தம்பதியின் மகன் நாக சைதன்யாவை, சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து விட்டனர். எனினும் திருமண வாழ்க்கை முறிவு குறித்து அதிகம் கவலைப்படாத சமந்தா, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை சமந்தா நடிப்பில், வரும் 14ம் தேதி சாகுந்தலம் படம் வெளியாக இருக்கிறது. மயோசிடிஸ் எனப்படும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் என்றாலும், இன்னும் முழுமையாக அந்த நோயின் தாக்கத்தில் இருந்து அவர் விடுபடவில்லை. எனினும் முதலில் ஒத்துக்கொண்ட சில படங்களை முடித்து விட்டு, சில காலம் சினிமாவை விட்டு முழுமையாக விலகி, ஓய்வில் இருக்க, சமந்தா முடிவெடுத்து இருக்கிறார்.

தற்போது ஆலப்பியில் நடந்து வரும், குஷி படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில், மலையாள நடிகர் பகத் பாசில் குறித்து, தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் சமந்தா. அது தற்போது வைரலாகி வருகிறது.

‘எனது அம்மா, ஆலப்புழாவை சேர்ந்தவர். ஆனால், என் அம்மா எனக்கு மலையாளம் கற்றுத் தரவில்லை. அது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. மலையாளத்தில் அனைவருமே திறமையானவர்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசிலுடன் நடித்த போது, அவரது நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது, என நடிகை சமந்தா கூறி இருக்கிறார்.

--Advertisement--

பகத் பாசில், இயக்குநர் பாசில் மகன்; காதலுக்கு மரியாதை, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூட வா படங்களின் இயக்குநர் பகத் தந்தை பாசில் தான். நடிகை நஸ்ரியாவை பகத் பாசில் திருமணம் செய்திருக்கிறார். பகத் பாசில் மிகச்சிறந்த நடிகர். வேலைக்காரன், விக்ரம் படங்களில், அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அவருடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த போது, பகத் பாசிலின் நடிப்பு திறமையை கண்டு வியந்து போயிருக்கிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் தற்போது வௌிப்படையாக சொல்லி இருக்கிறார் சமந்தா.