“தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி.. அதை பண்றாரு..” என்னால் முடியல.. கணவர் குறித்து கதறும் VJ மகாலட்சுமி..!

பிறந்த வருடம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை சீரியல் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான VJ மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து இருந்தார். அதன் பிறகு சீரியல் நடிகர் ஒருவரை கள்ளத்தனமாக காதலித்து வந்த இவர் அந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும் அவரை பிரிந்து விட்டு தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்திருக்கிறார்.

ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்த விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் நடித்தபோது விஜே மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இது திருமணமாகவும் நடந்தது.

மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். இவர்களது திருமணத்திற்கு ஏராளமானனோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆனால், மறுபக்கம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். வெறும் பணத்துக்காக ரவீந்தர் போன்ற ஒரு நபரை நீங்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று விஜே மகாலட்சுமி கடுமையாக விளாசினார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் ரவிந்தர் பெரிதாக மனவருத்தம் கொள்ளவில்லை மாறாக எல்லோரும் வயிற்று எரிச்சலில் பேசுகிறார்கள் மகாலட்சுமி போன்ற ஒரு பெண் எனக்கு மனைவியாக கிடைத்தது நான் செய்த வரம் என்று பேசியிருந்தார். தன்னுடைய பக்குவப்பட்ட பேச்சின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றார் ரவீந்தர்.

அவ்வப்போது இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த தம்பதியினர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

பேட்டியில் பேசிய ரவிந்தர் தன்னுடைய மனைவி மகாலட்சுமி குறித்து கூறியதாவது நான் திருமணம் செய்யும்போதே ஒரு கண்டிஷன் போட்டு தான் திருமணம் செய்து கொண்டேன். என்னால் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க முடியாது என தெரிந்து விட்டது.

எனவே நீ குண்டாகி விடு என்று கூறினேன். ஆனால், மகாலட்சுமி நாளுக்கு நாள் உடல் எடையை குறைந்து கொண்டே போனார். வெறுரும் கிரீன் டீ குடித்து மட்டுமே வாழ தொடங்கிவிட்டார்.

ஒரு நாளைக்கு ஒரு வேலை தான் சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தார். இப்படி இருந்தால் இன்னும் ஒல்லியாகி விடுவார் என்பதால் நான் அவரிடம் சண்டை போட்டேன் என கூறியிருக்கிறார்.

அப்பொழுது குறுக்கிட்ட  VJ மகாலட்சுமி.. இவருடன் இருந்தால் டயட்டை பின் தொடர்வது கடினமான விஷயமாகிவிடும். ஏனென்றால் நான் தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுப்பி அமர வைத்து சாப்பிட வைத்து விடுகிறார்.

என்னால் டயட்டை ஃபாலோவ் பண்ண முடியல. ஆனால், நான் சாப்பிட ஆரம்பித்து விட்டால் எப்படி சாப்பிடுவேன் என எனக்கே தெரியாது. அவ்வளவு மோசமாக சாப்பிடுவேன்.. என கூறியிருக்கிறார் நடிகை VJ மகாலட்சுமி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

--Advertisement--