அந்த நபருடன் நெருக்கம்.. ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்துக்கு காரணம் இது தானா..?

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகச்சிறந்த இயக்குனராக விளங்குகிறார். அண்மையில் கூட இவர் லால் சலாம் படத்தை இயக்கியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: என்னை காமெடி பீஸ் ஆக்கிய இயக்குனர்.. உச்ச கட்ட கடுப்பில் பகத் பாசில்..!


இயக்குனராக விளங்கும் ஐஸ்வர்யா தனுஷை 2004-ஆம் ஆண்டு காதலித்து பெரியவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். இதனை அடுத்து இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்று இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 2022-ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தார்கள்.

இந்தப் பிரிவு செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தாரும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆனால் இன்று வரை இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகாமல் இருப்பதில் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

--Advertisement--

அந்த நபருடன் நெருக்கமா..

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷின் விவாகரத்து மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி 2004 தங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என விவாகரத்து கேட்டிருக்கிறார்கள்.


விவாகரத்துக்கு காரணம் இதுதானா..

இதனை அடுத்து இருவரும் விவாகரத்து செய்ய காரணம் என்ன என்று பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் இதற்கான காரணம் தற்போது பல்வேறு வகைகளில் பரவி வருகிறது.

அந்தவகையில் இதற்கு காரணம் சில நடிகைகளுடன் நடிகர் தனுஷ் மிகவும் நெருக்கமாக இருந்தது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என சில விஷயங்கள் கசிந்துள்ளது.

பல்வேறு தவறுகளை தனுஷ் செய்த போதும் அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா மீண்டும், மீண்டும் பெண்கள் விஷயத்தில் எப்படி செய்தால் விவாகரத்து தான் என்று கூறிய நிலையிலும் தனுஷ் அதைக் கேட்காமல் நடந்து கொண்டதின் காரணத்தால் தான் இந்த விவாகரத்து எண்ணம் ஏற்பட்டுள்ளது என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.


எனினும் எந்த விஷயம் முற்றிலும் உண்மையானதா? இல்லையா? என்பது குறித்து முழு விவரமும் தெரியவில்லை. இதனை அடுத்து இணையத்தில் காட்டு தீயாய் இந்த விஷயம் பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரது விவாகரத்துக்கு காரணம் இது தான் என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

எனவே தன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பொருத்த வரை அவர்களே வாய் திறந்து தங்களது விவாகரத்துக்கான காரணத்தை சொன்னால் மட்டுமே நாம் உண்மையை உணர முடியும். எனவே அது வரை காத்திருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இதையும் படிங்க: தவறான உறவுக்கு அழைத்த டைரக்டர்.. யாரு தெரியுமா..? ரகசிய ரிப்போர்ட்..!

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி அவர்களுக்குள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விஷயம் இப்படி உள்ளது என்பதை தொடர்ந்து பேசி பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.