விஜய் என்னை பார்த்து அப்படி பேசினார்.. நடிகை ஜோதி மீனா ஓப்பன் டாக்..!

விஜய் என்னை பார்த்து அப்படி பேசினார்.. நடிகை ஜோதி மீனா ஓப்பன் டாக்..!

உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்த ஜோதி மீனாவை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் போட்ட குத்தாட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தையே புரட்டிப் போடக் கூடிய அளவு ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் குடும்பம் திரைப்பட பின்னணியை கொண்டது. இவரது தந்தை ஒளிப்பதிவாளராக விளங்கி இருக்கிறார். எனவே இவரது திரை பிரவேசம் எளிதாக இவருக்கு அமைந்தது.

நடிகை ஜோதி மீனா..

நடிகை ஜோதி மீனாவை பொறுத்த வரை சரத்குமாரின் படமான ரகசிய போலீஸ் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார். இதனை அடுத்து இவருக்கு உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் படு கிளமராக நடித்து தமிழக இளசுகளின் கனவு கன்னியாக மாறினார்.


இதையும் படிங்க: ஒரு தடவ போட்டதை திரும்ப போட மாட்டேன்.. இது தான் காரணம்..? சினேகா சொன்ன காரணத்தை பாருங்க..

அத்தோடு அழகிய நாட்கள், கோபாலா கோபாலா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் அஜித் குமார், பிரபு, சரத்குமார் போன்ற உச்சகட்ட நடிகர்களோடு இணைந்து குத்தாட்டம் போட்டவர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கக் கூடிய இவர் பல படங்களில் 1995 முதல் 2001 வரை நடித்திருக்கிறார். இவரது குத்தாட்டத்தை என்றும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

விஜய் என்னைப் பார்த்து அப்படி பேசினார்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் விஜய் சாருடன் டான்ஸ் ஆட தான் பயந்துவிட்டதாக கூறியிருக்கிறார். அத்தோடு பல முன்னணி நடிகர்களோடு இணைந்து குத்தாட்டம் போட்ட இவர் ஏன் விஜய் உடன் டான்ஸ் ஆட பயந்தார் என்பதற்கான காரணம் தெரியுமா?.

இதற்குக் காரணம் விஜயோடு கவாலி டான்ஸ் ஆட வேண்டும் என்று சொன்னது தான் இந்த டான்ஸ் எனக்கு ஆட தெரியாது. இதனை அடுத்து இந்த நடனத்தை பயிற்சி செய்து ஆடலாம் என்று நினைத்த போது விஜய் வருவாரா? என்று கேட்க விஜய் வரமாட்டார். நீங்கள் தான் சரியாக ஆட வேண்டும் ஏனென்றால் உங்களுடைய பகுதி தான் அதில் அதிகளவு உள்ளது என்று கூறினார்கள்.


மனதுக்குள் பல்வேறு பயம் இருந்த சூழ்நிலையில் சரி என்று முதல் நாள் சென்று ரிகர்சல் செய்துவிட்டு மறுநாள் ஷூட்டிங்குக்கு சென்றேன். அப்போது சோலோவாக ஆடிய பொழுது விஜய் என்ட்ரி செய்த பின்பு ஏதோ குசு குசுவென்று பேசி படி வந்தார்.

ஓப்பன் டாக்கால் அதிர்ச்சி..

இதனை அடுத்து விஜய் என்ன சொன்னாரோ ஏதோ என்று பயத்தோடு இருந்த நான் அவரிடம் சென்று என்னை பார்த்து அப்படி என்ன பேசினீங்க என்று கேட்க உங்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்பதைத்தான் நான் பேசினேன் என்று கூறினார். இந்த பேச்சைக் கேட்டு தற்போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..


மேலும் தன் நடனத்தில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தக் கூடிய தளபதி விஜய் தன்னுடைய நடனத்தை சிறப்பாக இருக்கிறது என்று சொன்ன விஷயத்தை நாசுக்காக சொன்ன ஜோதி மீனாவின் ஓபன் டாக் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஏற்கனவே குத்தாட்டத்தில் களை கட்டும் ஜோதி மீனாவிற்கு டாப் டக்கரான பெயரை தளபதி விஜய் தந்திருக்கிறார் என்பதை மறக்காமல் ஷேர் செய்கிறார்கள்.