“நான் அவரோட பொண்டாட்டின்னு நெனச்சிக்கிட்டு அடிச்சிருக்காரு..” கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்…!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய ரசிகர் குறித்தான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மட்டுமல்ல இதனை கேட்ட சக ரசிகர்களுக்குமே வியப்பாக இருக்கிறது கீர்த்தி சுரேஷ் கூறிய இந்த தகவல்.

அப்படி அந்த ரசிகர் என்ன செய்தார்..? எதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை பொங்க இந்த தகவலை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் என்று வாருங்கள் பார்க்கலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்று நடிகையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த இவர் சமீப காலமாக கிளாமரில் இறங்கி அடிக்கிறார்.

எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

குறிப்பாக என்சிசியில் சேர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சார்ஜண்டிடம் தமிழில் கமெண்ட் பண்ணுங்க.. ஹிந்தியில் கமெண்ட் பண்ணினால் எனக்கு ஒண்ணுமே புரியவில.. என்று சொல்லும் வசனம் ரசிகர் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

உங்களுடைய தமிழ் ஆர்வத்தை கொண்டு வந்து ஒரு ராணுவ கட்டமைப்பில் இருக்கக்கூடிய ஒரு இயக்கத்தின் மீது தான் திணிப்பீர்களா.. என்று கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ரசிகர் பற்றியும், அவர் செய்த சில செயல்கள் பற்றியும் பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, ரசிகர் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி கடிதங்கள் அனுப்புவார். என்னுடைய வீட்டின் விலாசமும் அவருடைய வீட்டின் விலாசமும் தெளிவாகவே இருக்கும்.

தன்னுடைய படங்கள் குறித்தும் நான் நடிப்பது குறித்தும் விமர்சனம் செய்து கடிதங்கள் அனுப்புவார். நாளுக்கு நாள் இவருடைய சேட்டைகள் அதிகமானது. ஒருமுறை நான் வீட்டில் இல்லாத பொழுது என்னுடைய வீட்டிற்கு நேராக வந்திருக்கிறார் அந்த ரசிகர்.

வந்தவர் நான் அந்த உடைய அணியக்கூடாது.. இந்த உடையை அணிய கூடாது.. என்றெல்லாம் என்னுடைய வீட்டில் வேலை செய்யும் நபர்களிடம் கூறியிருக்கிறார். மட்டுமில்லாமல் அந்த நடிகரோடு ஏன் நடிக்கிறா.. எந்த நடிகரோடு ஏன் நடிக்கிறா.. அவரோடு எல்லாம் நடிக்க கூடாது.. என்று நான் என்னமோ அவருடைய பொண்டாட்டி மாதிரி நெனச்சிகிட்டு கதை கதையா அடிச்சிருக்காரு.. நெறைய கண்டிஷன்களை போட்டிருக்காரு…

இதனை என் வீட்டில் வேலைக்காரர்கள் கேட்டுவிட்டு என்னிடம் கூறினார்கள். எனக்கு ஒரே சிரிப்பாய் போய்விட்டது .எதற்கு இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று அந்த ரசிகர்களின் செயல்பாடு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

   

--Advertisement--