புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்..

புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்..

ஜீ தமிழ் தொலைக்காட்சி கிட்டத்தட்ட விஜய் தொலைக்காட்சிக்கு போட்டியாக பல்வேறு விதவிதமான நிகழ்ச்சிகளை கொண்டு வந்து மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற ரியாலிட்டி ஷோவை ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் மிகச்சிறந்த நடனத்திறமைகள் இருந்தும்…

இதையும் படியுங்கள்: விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..

வாய்ப்புகள் இல்லாமல் மேலே வரமுடியாமல் கஷ்டப்படும் கலைஞர்களை அழைத்துவந்து அவர்களின் திறமையை உலகிற்கு கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்திருகிறார்கள்.

ஜீ தமிழ் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”:

இந்நிகழ்ச்சிக்காக மிகவும் நடுத்தர குடும்பத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மேலே வர முடியாத அளவுக்கு இருக்கும் திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளனர்.

--Advertisement--

இதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமே. அந்த வகையில் திறமைகளை தேடி அடையாளப்படுத்தும் பிரம்மாண்ட நடன மேடையான இதில் சுரேஷ் என்பவர் மிகச் சிறப்பான பர்பாமன்ஸ் ஒன்று செய்கிறார்.

அதை பார்த்து சினேகா வியந்து போகிறார். அவரின் திறமையை பார்த்து சினேகா அசந்து போக ஒரு நாள் உங்கள வீட்டுக்கு கூப்பிட்டு நான் விருந்து வைக்கணும் என்று அவரை பாராட்டினார்.

இதையும் படியுங்கள்: அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

ஆனால், நிகழ்ச்சிக்காக எல்லோரும் இப்படி சொல்வது வழக்கமான ஒன்று தான் என மக்கள் நினைத்திருந்த வேளையில் சினேகா உண்மையிலே அவருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த சினேகா:

ஆம், சினேகா போட்டியாளர் சுரேஷை தனது ECR வீட்டிற்கு அழைத்துச் சென்று தல வாழையிலை வைத்து அங்கு அவருக்கு பிடித்தமான உணவுகள் தரமான உணவுகளை பார்த்து பார்த்து பரிமாறினார்.

இதையும் படியுங்கள்: நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..!

அதை பார்த்த அந்த நடன கலைஞர் சுரேஷ் கண்கலங்கி மிகவும் எமோஷனல் ஆகிவிடுகிறார். சினேகாவின் இந்த செயல் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பலரும் சினேகாவை பாராட்டினார்கள். ஆனால் வெகு சிலர் சினேகா தற்போது ஸ்நேஹாலயா என்ற சேலை கடை ஒன்றை டி நகரில் சொந்தமாக துவங்கி இருக்கிறார்.

அதற்கான விளம்பரமாக தான் அவர் எப்படி எல்லாம் செய்கிறார் என பலர் விமர்சித்துள்ளனர். ஆனால் உண்மையில் அவர் சேலை விளம்பர கடைக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்றால்…

100 புடவையை கொண்டு போய் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கி விட்டு வரலாம். அவர் அப்படி செய்யவில்லை.

இதை ஆத்மார்த்தமாகத்தான் செய்துள்ளார் என்று பிரபல விமர்சகர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.