சான்ஸ் தரேன்.. ரூமுக்குள்ள வந்து இதை பண்ணு-ன்னு கேட்டார்.. பிரபல இயக்குனர் குறித்து யாஷிகா குற்றச்சாட்டு..!

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையை சேர்ந்த யாஷிகா, பிக்பாஸ் வீட்டுக்குள் லேட்டஸ்ட் பேஷன் மாடர்ன் டிரஸ்களில் தினமும் வலம் வந்தார். இடுப்பும், முன்னழகும், பின்னழகும், தொடை வரை மட்டுமே குட்டை பாவாடைகளும், ஷார்ட்ஸ்களும் அணிந்து, பார்வையாளர்களை சூடேற்றினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டால் போதும், அடுத்து உங்கள் லெவலே வேறதான் என்று ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி துவக்கத்தில், வீட்டுக்குள் வரும் போட்டியாளர்களிடம் வாய் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் கமல். அப்படி நம்பிப் போன பலருக்கும், வீட்டை விட்டு வெளியேறி வந்தால், கண்டுக்க ஆளில்லை.

நான் பிக்பாஸ் செலிபிரட்டி என்றால், அப்படியா, அந்த நிகழ்ச்சியே எனக்கு பார்க்கற பழக்கமில்லே என்பதுதான் பலரது பதிலாக இருந்திருக்கிறது. ஆனால் யாஷிகா ஆனந்த் போன்றவர்களின் அழகு, பிக்பாஸ் செலிபரட்டி என்பதை காட்டிலும் கவர்ச்சியான, மிக அழகான பெண் என்ற அடையாளம் அவரை வேற லெவலில் வைத்திருக்கிறது.

ஆனால், வளரும் இளம் நடிகையாக சினிமா வாய்ப்புகளை தேடிச் செல்லும்போது அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்னையை சந்திக்க வேண்டிய நிலை தவறாமல் ஏற்படுகிறது. அப்படி அனுபவம் தனக்கும் நேர்ந்ததாக யாஷிகா தற்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல இயக்குனர் மீது இந்த பகீர் குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். ஆடிஷனுக்காக தன் அம்மாவுடன் சென்றிருக்கிறார். அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு, யாஷிகாவிடம் அந்த இயக்குநர் தனியாக பேசி இருக்கிறார்.

அப்போது பட வாய்ப்பு வேண்டும் என்றால் ரூமுக்குள் வந்து என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. சினிமாவில் உன்னை வேறு இடத்திற்கு கொண்டு சென்று வைக்கிறேன் என்று கூறியிக்கிறார் அப்போதே ரூமை விட்டு வெளியே வந்திருக்கிறார் யாஷிகா. என்னுடைய தந்தை வயது இருக்கும் அந்த இயக்குனரிடம் எப்படி என்னால் படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியும். அவர் எப்படி இதை எதிர்பார்த்தார் என்றும் தெரியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார் யாஷிகா.

   

--Advertisement--