“ஏற்கனவே 2 புருஷன் காட்டுனவ அவ..” விஜயகாந்த் காதலுக்கு நோ சொன்ன குடும்பம்.. யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் இருவரும் நிஜத்திலே காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்வதெல்லாம் காலம் காலமாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

சிறந்த காதல் ஜோடிகளாக தற்போது சூர்யா ஜோதிகா மற்றும் அஜித் ஷாலினி உள்ளிட்ட பல நடிகர்களை எடுத்துக்காட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

காதல் ஜோடியாக விஜயகாந்த் – ராதிகா:

அந்த வகையில் அந்த காலத்திலேயே ஸ்டார் நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் அவர்கள் நடிகை ராதிகாவை உருகி உருகி காதலித்தாராம்.

இதையும் படியுங்கள்:டாப் ஸ்டார் பிரஷாந்த் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

இவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஜோடியாக நடித்து வந்திருக்கிறார்கள்.

அப்போது இருவருக்குள்ளேயும் ஏற்பட்ட நட்பு பின்னாளில் அது காதலாக மாறியிருக்கிறது.

நடிகை ராதிகா விஜயகாந்தை காதலிக்கும் போது அவரது வளர்ச்சியில் கவனமாக இருப்பாராம்.

அப்படித்தான் விஜயகாந்தை ஒரு ஸ்டைலிஷ் நடிகராக மாற்றியவர் நடிகர் ராதிகா தான்.

கிராம பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நாட்டுக்கட்டையாக நடித்து வந்த விஜயகாந்தை ஒரு டாக் ஆப் டவுன் ஆக்கி ஆக்சன் ஹீரோ அந்தஸ்துக்கு புகழ் பெற வைத்தவர் என்றால் அது ராதிகா தான்.

இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படங்களில் நடிக்கும் போது அவர்களின் காதல் காட்சி ரொமான்ஸ் உள்ளிட்டவை காதல் கிசுகிசுக்களாக வெளியாகியது.

அப்படித்தான் விஜயகாந்த் காதல் பற்றி மக்கள் பேச ஆரம்பித்தார்கள். இது குறித்து ராதிகாவை பேட்டி ஒன்றில்,

எங்கள் இருவருக்கும் இருந்த காதல் உறவு இருந்தது உண்மைதான் என வெளிப்படையாக கூறினார்.

இதையும் படியுங்கள்:கையும் களவுமாக சிக்கிய கயல் ஆனந்தி.. தேர்தல் முடிந்த பிறகு தான் வேடிக்கையே இருக்காம்..! அதிரடி தகவல்கள்..!

நடிகர் விஜயகாந்த் கிராமம் சார்ந்த கதைகள் வெட்டுக்குத்து அடிதடி உள்ளிட்ட கதைய அம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த காலகட்டம் அது.

காதலாக மாறிய நட்பு:

அந்த நேரத்தில் தான் நடிகை ராதிகாவுடன் நடிகர் விஜயகாந்த் சில படங்களில் ஜோடியாக நடித்தார். அப்போது ராதிகாவுக்கும் விஜயகாந்த் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய நட்பாக மாறியிருக்கிறது.

அதன் பிறகு நடிகர் விஜயகாந்தின் நடை உடை பாவனை நடிக்கும் ஸ்டைல் சிகை அலங்காரம் என அனைத்துமே ஒரு வெஸ்டன் ஸ்டைலுக்கு மாறியது.

இது விஜயகாந்த்திற்கு மிகவும் பிடித்துப் போகவே நடிகை ராதிகாவை காதலிக்கவும் செய்திருக்கிறார் விஜயகாந்த்.

ஆனால் அந்த நேரத்தில் விஜயகாந்தின் காதலை அவர்கள் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கின்றனர்.

காரணம் ஏற்கனவே நடிகை ராதிகா இரண்டு கணவர்களை விவாகரத்து செய்தவர் இருவரும் ஒரே சமூகம் என்றாலும் கூட,

ராதிகாவை வெறுத்த விஜயகாந்த்:

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த பெண்ணை உனக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என குடும்பத்தினர் மறுத்து இருக்கின்றனர்.

பெற்றோரின் பேச்சுக்கு அடங்கி நடக்கும் பிள்ளையான விஜயகாந்த் அப்படியே நடந்திருக்கிறார். அதன் பிறகு ராதிகாவுடன் நட்பை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு வீட்டில் பார்த்து வைத்த பெண்ணான பிரேமலதா அவர்களை திருமணம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

விஜயகாந்த் உருகி உருகி காதலித்த ராதிகா திருமண புடவை திருமண புடவை வரை ஏற்பாடு செய்து வைத்திருந்தாராம்.

இதையும் படியுங்கள்:ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

இந்த காதல் நிறைவேறாமல் போனதால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதன் பிறகு அவர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமண உறவும் அவருக்கு சரிவர அமையாததால் அவருடன் ஆன உறவை முறித்துக் கொண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய காணொளி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.