இந்த அமைச்சரை பார்த்த பிறகு கல்யாணம் பண்ணிக்கணும்.. குழந்தை பெத்துக்கணும் போல இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்..!

இந்த அமைச்சரை பார்த்த பிறகு கல்யாணம் பண்ணிக்கணும்.. குழந்தை பெத்துக்கணும் போல இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்..!

டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப நாட்களில் திரையுலகில் தன்னை நிலை நிறுத்த கடுமையான போராட்டங்களை சந்தித்திருக்கிறார். எனினும் இவர் தனது நடிப்பு திறமையை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

நடிக்க வந்த புதிதில் யாரும் ஏற்று நடிக்க விரும்பாத அம்மா கேரக்டர் ரோலை காக்கா முட்டை திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் செய்து அனைவரது மனதையும் எளிதில் கவர்ந்து விட்டார்.

அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விடுவது இயல்பான ஒன்றாகி விட்டது.

--Advertisement--

இவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் அதிகளவு வெளி வந்த நிலையில் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்ற ரீதியில் தனது திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

குழந்தை பெத்துக்கணும்..

இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் இருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் பிரம்மாண்டமான பொங்கல் திருவிழா நடைபெற்று உள்ளது. பொங்கல் என்றாலே அது தமிழர்களின் பண்டிகை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

எனவே இந்த விழாவில் சிறப்பு விருந்தாளராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சம்யுக்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தாவை அமைச்சர் ஜீவன் அழைத்திருந்தார்.

இதனை அடுத்து இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கு அமைச்சர் ஜீவன் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் நான் நினைத்தது போலவே பொங்கல் கொண்டாட்டம் படு விமர்சனையாக நடைபெற்றது என்று மகிழ்ச்சி பொங்க கூறி இருக்கிறார்.

அமைச்சர் ஜீவன் அழைத்த போது அவர் வயதானவராக இருப்பார் என்று தான் நினைத்ததாகவும் எங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது இந்த வயதில் ஒருவர் அமைச்சராக இருக்கிறார் என்ற விஷயம் தனக்கு ஆச்சரியத்தை தந்தது எனக் கூறினார்.

மேலும் அமைச்சர் ஜீவன் பற்றி பலவிதமான விஷயங்களை கேள்வி பட்டு இருப்பதாகவும், இவரால் மக்கள் பலரும் பலனடைந்து வருவதாகவும் கூறி அவர் அமைச்சரை பார்க்கும் போது  திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது என கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.