குடிக்கும் காஃபியில் எதையோ கலந்து விட்ட நடிகை.. திணறிய ரஜினிகாந்த்.. ரகசியம் உடைத்த குட்டி பத்மினி..!

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 73 வயதாகியும் இன்னும் அவரது இளமை தோற்றம் அப்படியேதான் இருக்கிறது.

அதே ஸ்டைல், அதே நடை ,அதே பேச்சு , டயலாக் டெலிவரி, சூப்பர் ஸ்டார் என்ற மேனரிசம் இப்படி எல்லாமே இன்னும் மாறாமல் 73 வயதிலும் அப்படியே இருக்கிறது.

குறிப்பாக அவரது உடல் தோற்றத்தை அவர் மெயின்டைன் செய்து வரும் விதம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியது.

73 வயதாகியும் இளமை குறையல:

முன்பெல்லாம் கமல் மிகவும் அழகாகவும் கலராகவும் இருப்பதால் ரஜினி தான் அவரை காட்டிலும் வயதானவர் போன்று தெரிவார்.

--Advertisement--

ஆனால் சமீப நாட்களாக ரஜினியின் ஒல்லியான தோற்றம் கச்சிதமான உடல் அழகும் கமல்ஹாசனை தூக்கி சாப்பிட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம் ரஜினிகாந்த் தற்போது வேட்டையின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்த வருகிறார்.

அண்மையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசர் வெளியாகி ரஜினியின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஆம் அவரது அவரது அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ரஜினியின் கெத்தான மாஸான என்ட்ரி உள்ளிட்டவை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.

இதனால் வரை ரஜினியின் இடத்தை யாராலும் தக்க வைக்கவே முடியாது என்று தனக்கே தனி அடையாளத்தை பிடித்து தன் நாற்காலியை உச்சத்தில் கொண்டு போய் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டாருக்கே ஆட்டம் கொடுத்த தொடர் தோல்வி:

அப்படிப்பட்ட ரஜினிகாந்த் சில வருடங்களாக தோல்வி படங்கள் வந்ததால் தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் பெரும் சறுக்களை சறுக்கியதால் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆட்டம் கொடுத்து விட்டது.

இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வந்த ரஜினிகாந்த் நெல்சன் திலிப் குமார்இயக்கத்தில் நடித்த வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக ,

மாபெரும் வெற்றி கொடுத்து கிட்டத்தட்ட ரூ. 700 கோடி வசூலி ஈட்டி மாபெரும் சாதனை படைத்தார்.

அந்த படத்தை தொடர்ந்து தற்போது வேட்டையன் மற்றும் கூலி திரைப்படத்தை பெரிதும் நம்பி,

படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படியான சமயத்தில் குட்டி பத்மினி நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

எனக்கு முதன் முதலில் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தி வைத்ததே கமல்ஹாசன் தான். அப்போதிலிருந்து நான் கமல்ஹாசன் மற்றும் சில நண்பர்கள் எல்லாரும் ஒரு கேங்க் ஆக இருப்போம்.

நான் அந்த சமயத்துல கொஞ்சம் அதிகமா சம்பாதித்து இருந்தேன். அதனால அப்போ நான் தான் எங்களோட ஃபிரண்ட்ஸ்க்கு ட்ரீட் வைப்பேன்.

ரஜினி காஃபியில் எதையோ கலந்த நடிகை:

டீ ,பிஸ்கட், ஸ்நாக்ஸ் அப்படின்னு நாங்க சாப்பிடுறதை பழக்கமா வச்சுப்போம் அதன் மூலம் அவரவர் பேசி எங்களோட நேரத்தை கழிப்போம்.

அப்படி ஒரு சமயத்தில் நாங்கள் எல்லாரும் டீ குடிச்சிட்டு இருக்கும்போது ஸ்ரீபிரியா ரஜினிகாந்த் டீயில் எதையோ கலந்து கொடுத்துட்டாங்க.

அதை அவர் குடிச்சிட்டு ஷார்ட்க்கு போனதும் அவரால் டயலாக்கை பேச முடியல. வாயே திறக்க முடியல,

இருந்தாலும் எப்படியோ டயலாக் பேசிட்டு வேகமா அந்த ஷாட்டை முடிச்சிட்டு ஸ்ரீபிரியாவிடம் வந்து,

ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க என்ன செல்லமா சண்டை போட்டார் ரஜினிகாந்த். எங்களோட நாட்கள் அவ்வளவு அழகா சென்றது.

என கடந்த நாட்களை குறித்த மகிழ்ச்சியான அனுபவங்களை பேசி மகிழ்ந்தார் குட்டி பத்மினி. இந்த பேட்டி தற்போது ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது.