தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..

தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஷகீலா. கடந்த 1990களில் பலரது தூக்கத்தை கெடுத்தவர்.

பிளே கேர்ள்ஸ் என்ற படத்தில், சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்த ஷகீலா தொடர்ந்து பி கிரேடு படங்களில் நடித்தார். ஷகீலா படங்கள் என்றாலே, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ஷகீலா

ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவர்ச்சி நடிப்பில் இருந்து விலகிய ஷகீலா, இப்போது காமெடி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சொந்தமாக யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஷகீலா, அடிக்கடி மாஜி கவர்ச்சி நடிகைகளை அழைத்து நேர்காணல் செய்கிறார். அதேபோல் அவரும் நிறைய நேர்காணல்களில் கலந்துக்கொண்டு பேசுகிறார்.

குழந்தைகளை எனக்கு பிடிக்கும்

ஒரு நேர்காணலில் நடிகை ஷகீலா கூறியதாவது, குழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடைகளுக்கோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போதோ குழந்தைகளை பார்த்தால், யாராவது குழந்தைகளை வைத்திருந்தால் அவர்களிடம் இருந்து குழந்தைகளை 5 நிமிடங்கள் வரை வைத்திருப்பேன்.

--Advertisement--

குழந்தை அழும் பட்சத்தில் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவேன். அந்தளவுக்கு குழந்தைகளை எனக்கு பிடிக்கும்.

இதையும் படியுங்கள்: ஒரே காரில் கமலும்.. சிம்ரனும்.. அப்புறம் கௌதமியே.. புயலை கிளப்பிய பிரபலம்..

வலுக்கட்டாயமாக திருமணம்

திருமணம் செய்துக்கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் இல்லை. ஆனால் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் நடக்கும். எனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும்.

எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்றாலும், அதற்காக எல்லாம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.

ஒர்க் அவுட் ஆகவில்லை

நான் எனது வாழ்க்கையில் 20, 30 காதல்களை செய்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு காதலையும் திருமணம் நோக்கியே நகர்த்திச் செல்ல முயற்சி செய்தேன். ஆனால் இதில் எதுவுமே எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.

இதை நான் இப்படி சொல்வதால், என்னை நீங்கள் தவறாக நினைத்தாலும், என்னை பிடிக்காமல் போனாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

இதையும் படியுங்கள்: நான் வேணும்ன்னு அடம் பிடித்தார்.. பிரபலம் குறித்து மேடையிலேயே கூறிய நடிகை ஆண்ட்ரியா..!

விதிமுறை எல்லாம் கிடையாது

நான் பேட்டியில் உண்மையை மட்டுமே சொல்ல நினைக்கிறேன். காதல் ஒருமுறை தான் வரும் என்று விதிமுறை எல்லாம் கிடையாது. சாகும் வரை காதல் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த காதல் யார் மீது வருகிறது என்பதை கவனிப்பது மிக முக்கியம்.

கையை அறுத்திருக்கிறார்கள்

ஒரு காதல் முடிந்துவிட்டால், வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. காதலுக்காக எந்த தற்கொலை முயற்சியும் நான் செய்யவில்லை. கையை அறுத்துக்கொண்டது இல்லை. ஆனால் எனது காதலர்கள், எனக்காக கையை அறுத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் ஷகீலா.

தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள், தன் காதலுக்காக கையை அறுத்துக் கொண்டார்கள் என்று நேர்காணலில் குண்டை தூக்கி போட்டிருக்கிறார் நடிகை ஷகீலா.