முதல் நாளே அந்த உடையில் வந்த நயன்தாரா..! - கடுப்பான இயக்குனர்..! சரத்குமார்ஓப்பன் டாக்..!

முதல் நாளே அந்த உடையில் வந்த நயன்தாரா..! – கடுப்பான இயக்குனர்..! சரத்குமார் ஓப்பன் டாக்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா இன்று தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் அதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நயன்தாரா உடை…

இவர் தமிழில் சரத்குமார் உடன் இணைந்து ஐயா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் நடித்த போது நிகழ்ந்த சுவாரசியமான தகவல்களை தற்போது சரத்குமார் பகிர்ந்திருக்கிறார்.

தற்போது ஜவான் திரைப்படத்தை அடுத்து பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கும் நயன்தாரா பலவிதமான பிசினஸ்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தின் மூலம் சர்ச்சைகள் கிளம்பியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் தனக்கு என்று பெரும் அளவு ரசிகர்களை இந்தியா முழுவதுமே பெற்றிருக்கிறார்.

--Advertisement--

இவருக்காக சினிமா தயாரிப்பாளர்களும், கதை ஆசிரியர்களும், இயக்குனர்களும் கதை எழுதி இவர் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போல இவரை லேடி சூப்பர் ஸ்டார் அன்று அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

கடுப்பான ஹரி..

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன இவர் ஆரம்ப காலத்தில் ஐயா படத்தில் நடித்தது பற்றி பெருமை கொள்வதாக சரத்குமார் கூறி இருக்கிறார். எங்களோடு பயணிக்க ஆரம்பித்தவர் ஐயா படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இன்று முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா ஐயா படத்தின் படப்பிடிப்புக்கு முதல் நாள் வந்ததை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை. இந்த படத்தில் கிராமத்து வேடத்தில் நடிக்க இருந்த நயன்தாரா மாடர்ன் உடையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். இதனை அடுத்து இயக்குனர் ஹரி கடுப்பாகிவிட்டார்.

மேலும் இயக்குனர் ஹரி கோபமடைந்து அறைக்கு போ நான் உன்னை எப்படி கற்பனை செய்தேன், நீ இப்படி மாடன் உடையில் வந்திருக்கிறாயே என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவருடன் செல்லுங்கள் என கூறிய வார்த்தைகள் என்னும் நினைவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இருக்கும் நயன்தாராவை பார்க்கும் போது அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நயன்தாரா மிகவும் ரசிக்க வேண்டிய பெண் என்று தனது அனுபவங்களை நடிகை நமீதாவுடன் சரத்குமார் பகிர்ந்து இருக்கிறார்.

அத்தோடு பல ஆண்டுகள் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கக்கூடிய இவர் இயக்குனர் ஹரியிடம் பேச்சு வாங்கியதால் தான் எந்த அளவு உச்சத்தை அடைந்திருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.

மேலும் இவரின் கடுமையான உழைப்பு, விடா முயற்சி போன்றவை எத்தனை கிசுகிசுக்கள் எழுந்த போதும் அவற்றையெல்லாம் தூசியாக தட்டி விட்டு தன் முயற்சியில் முழுமூச்சாக இருந்ததின் காரணத்தால் தான் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.

மேலும் சரத்குமார் நயன்தாராவை பற்றி கூறிய இந்த பேச்சானது வைரலாக இணையங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் கொட்டு பட்டாலும் மோதிர கையில் கொட்டுப்பட வேண்டும் என்று இதைத்தான் பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.