அவன் கூட வாழ்ந்த நாட்கள் பத்தல.. என் புருஷன் என்னை விட்டு போகல.. நேத்து நைட் கூட.. ஸ்ருதி சண்முக பிரியா ஓப்பன் டாக்..!

அவன் கூட வாழ்ந்த நாட்கள் பத்தல.. என் புருஷன் என்னை விட்டு போகல.. நேத்து நைட் கூட.. ஸ்ருதி சண்முக பிரியா ஓப்பன் டாக்..!

ஸ்ருதி சண்முக பிரியா, கடந்த 2010ம் ஆண்டில் டிவி சீரியல் டைரக்டர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற கேரக்டரில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப்பரிசு, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஸ்ருதி சண்முக பிரியா கோவையை சேர்ந்தவர். நடிகை, மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். கோவையில் பிஎஸ்சி, எம்சிஏ. எம்ஐபி ஆகிய பட்டங்களை படித்து வாங்கியவர்.

தனுஷ் திரிஷா நடித்த கொடி என்ற படத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக ஸ்ருதி சண்முக பிரியா நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

கடந்த 2022ம் ஆண்டு மே 27ம் தேதியன்று, சிவில் இன்ஜினியர் மற்றும் உடற்பயிற்சி மாடலிங் ஆக இருந்த அரவிந்த் சேகரை திருமணம் செய்தார். ஆனால், 30 வயதே ஆன அவர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

--Advertisement--

ஏறக்குறைய 13 மாதங்கள் மட்டுமே அவர்களது மணவாழ்க்கை நீடித்த நிலையில், இந்த கொடுமையான சோகம், அவர்களை சார்ந்தவர்களை மட்டுமின்றி, கேள்விப்பட்டவர்களையும் மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியது.

சமீபத்தில் தன் கணவர் குறித்து பேசிய ஸ்ருதி சண்முக பிரியா, என் கணவர் இன்னும் இறக்கவில்லை. என்னுடன் தான் இருக்கிறார். அவருடன் வாழ்ந்த நினைவுகளை அசை போடவே பல வருடங்கள் ஆகும்.

ஆனால், அவன் என்னுடன் வாழ்ந்த நாட்கள் எனக்கு போதவில்லை. இரவு நேரங்களில் அவனை நினைத்து அழுவேன்.

நேத்து நைட் கூட அரவிந்த்தை நினைத்து அழுதேன் என நெஞ்சம் கனக்க பேசியுள்ளார் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா.