நினைவிடத்துல வந்து பர்ஃபார்மென்ஸா பண்றீங்க..? நடிகர்களை வெளுத்து வாங்கிய ப்ளு சட்டை மாறன்..!

சமூகவலைதளங்களில் ப்ளு சட்டை மாறன், அடிக்கடி தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர்கள் நடித்த படங்களின் நிறை, குறைகளை வெளிப்படையாக விமர்சிப்பது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் மொக்கையான படங்களை அவர் கிழித்து கட்டி தோரணம் கட்டி விடுகிறார்.

தேமுதிக தலைவர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வேதனையை ஏற்படுத்தியது. ஏனெனில் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக கேப்டன் பலரது மனங்களை கவர்ந்தவர். அதனால் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருமே அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைந்த நாளிலும், அதற்கு அடுத்த நாளும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல மாவட்டங்களில் தலைநகரங்களில் அனைத்து கட்சிகள், தமிழ் சினிமா ரசிகர்கள் சார்பில் மௌன ஊர்வலமும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.

ஆனால் அவர் தென்னிந்திய சங்கத் தலைவராக பதவி வகித்த, பல படங்களில் அவருடன் நடித்த, அவரால் பலவிதங்களில் நன்மை அடைந்த தமிழ் சினிமா சார்ந்த சிலர், அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்துக்கொள்ளவில்லை. அவருக்காக நான்குவரி இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை. அந்த வரிசையில் நடிகர்கள் வடிவேலு, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் இப்போது வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கார்த்தி, நடிகர் சிவக்குமார், அருண்விஜய் போன்றவர்கள் கேப்டனின் நினைவிடத்தின் முன் கண்ணீர் விட்டு கலங்கி நிற்கின்றனர். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், குலுங்கி குலுங்கி அழுத அவர்களை கிண்டலடிக்கும் விதமாக, சாவகாசமாக அவரது சமாதிக்கு வந்து இப்படி பெர்பாமென்ஸ் பண்றதை எல்லாம் ஊர் நம்பாது. சரி, இன்னும் யார் யார் அடுத்தடுத்து வர்றாங்கன்னு பார்ப்போம்,’ என பதிவிட்டு கலாய்த்துள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

--Advertisement--